ADDED : ஆக 23, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய வாய் சுகாதார திட்டத்தின் கீழ் நடமாடும் பல் மருத்துவ பிரிவு சார்பில், வாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஆசிரியர் சடகோபன் வரவேற்றார். பல் மருத்துவர் ஷில்பா வாய் சுகாதாரம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொது சுகாதார செவிலியர் மணிமொழி பல் பாதுகாப்பு மற்றும் பல் சுத்தம் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமரன் மற்றும் ஆசிரியர்கள் சூரியகுமாரி, முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

