/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்தவருக்கு வலை
/
ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்தவருக்கு வலை
ADDED : ஏப் 05, 2024 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்,: சூரமங்கலத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சூரமங்கலம் காலனியைச் சேர்ந்தவர் சிவபாலன், 43. இவர் நேற்று முன்தினம் மதியம் அதே பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்., மையத்திற்குள் நுழைந்து கருங்கல்லால் மெஷினை உடைத்து, சேதப்படுத்தினார்.
தகவலறிந்த ஏ.டி.எம்., பராமரிப்பாளர் கரியமாணிக்கத்தை சேர்ந்த சுகுமார் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த சிவபாலன் சுகுமாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சுகுமார் அளித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குப்பதிந்து சிவபாலனை தேடி வருகின்றார்.

