ADDED : மே 18, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: திருக்கனுார் பகுதியில் பொது இடங்களில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.
திருக்கனுார் அய்யனாரப்பன் கோவில் அருகே மது போதையில் ஆபாசமாக பேசி, பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட மதுரப்பாக்கம் பகுதியை சேர்ந்த அருணாச்சலம், 20; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

