sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கர்மயோகி பாரத் திட்டம் செயல்படுத்துவதில் ஜிப்மர் முன்னோடி நிறுவனமாக அங்கீகரிப்பு

/

கர்மயோகி பாரத் திட்டம் செயல்படுத்துவதில் ஜிப்மர் முன்னோடி நிறுவனமாக அங்கீகரிப்பு

கர்மயோகி பாரத் திட்டம் செயல்படுத்துவதில் ஜிப்மர் முன்னோடி நிறுவனமாக அங்கீகரிப்பு

கர்மயோகி பாரத் திட்டம் செயல்படுத்துவதில் ஜிப்மர் முன்னோடி நிறுவனமாக அங்கீகரிப்பு


ADDED : மார் 23, 2024 11:33 PM

Google News

ADDED : மார் 23, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ், கர்மயோகி பாரத் திட்டத்தில் நிர்வாகத்திலும், திறன் மேம்பாட்டிலும் சிறந்து விளங்கும் மூன்று நிறுவனங்களின் ஒன்றாக ஜிப்மர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் நடந்த தேசிய சுகாதாரம் குடும்ப நல அமைச்சகத்தில் அண்மையில் நடந்த கூட்டத்தில் இதற்கான பாராட்டு ஜிப்மர் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஜிப்மர் கர்மயோகி பாரத் திட்டத்தின் நோடல் அதிகாரி ஹவா சிங், ஜிப்மரில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி, திறன் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை பட்டியலிட்டார்.

எதிர்காலத்தில் ஜிப்மர், பாடநெறி வழங்கும் நிறுவனமாக மாறுவதற்கான விருப்பத்தை தெரிவித்தார். கர்மயோகி திட்டம் என்பது பொது சேவைகளில் திறன் மேம்பாட்டிற்கான தேசிய திட்டமாகும். இது இந்திய நெறிமுறைகளில் திறமையான பொது சேவையை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

அரசுடன் குடிமக்களின் தொடர்புகளை மேம்படுத்துவது, குடிமக்கள் மற்றும் வணிகத்திற்கான உதவியாளர்களாக மாறுவது, களத்திறனை மேம்படுத்தப்படுகின்றது. கர்மயோகி பாரத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஜிப்மர் முன்னோடி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஊழியர்களை இயக்குனர் ராகேஷ் அகர்வால் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us