நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார், : காட்டேரிக்குப்பம் அடுத்த சந்தைபுதுக்குப்பம் பேட் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் தயாளன். இவரது மகள் சிம்ரன், 24. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சிம்ரனை உறவினர் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இரண்டு மாதத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக சிம்ரன் பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.
பின், புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் உள்ள தனியார் ஷோரூமில் வேலை செய்து வந்தார். இதற்கிடையே, சிம்ரன் அடிக்கடி மொபைல் போனில் பேசி வந்தார். இதனை குடும்பத்தினர் கண்டித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சிம்ரன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தயாளன் அளித்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.

