நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
முத்தியால்பேட்டை பொன்னம்பல முதலியார் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த சைல கிருஷ்ணன் இவரது மகள் ரூபாஸ்ரீ, 17; இவர் அடிக்கடி மொபைல் பயன்படுத்தி கொண்டு இருந்தார். இதனை தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரூபாஸ்ரீ நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை, பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

