sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மிஷன் வீதியில் வாய்க்கால் சீரமைப்பு பணி எச்சரிக்கை அறிவிப்பு இல்லாததால் வாலிபர் பலி

/

மிஷன் வீதியில் வாய்க்கால் சீரமைப்பு பணி எச்சரிக்கை அறிவிப்பு இல்லாததால் வாலிபர் பலி

மிஷன் வீதியில் வாய்க்கால் சீரமைப்பு பணி எச்சரிக்கை அறிவிப்பு இல்லாததால் வாலிபர் பலி

மிஷன் வீதியில் வாய்க்கால் சீரமைப்பு பணி எச்சரிக்கை அறிவிப்பு இல்லாததால் வாலிபர் பலி


ADDED : ஏப் 15, 2024 04:39 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மிஷன் வீதியில் பொதுப்பணித்துறை தோண்டிய பள்ளத்தின் சிமென்ட் சிலாப் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

முத்தியால்பேட்டை, வ.உ.சி. நகர், காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 33; கிராபிக் டிசைனர். திருமணம் ஆகவில்லை.

நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி நகர பகுதிக்கு வந்த வெங்கடேசன், தனது யமாகா எப். இசட் பைக்கில் மீண்டும் வீடு திரும்பினார்.

நள்ளிரவு 2:00 மணிக்கு மிஷன் வீதி வழியாக தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சென்றார். கல்வே கல்லுாரி அருகே காமாட்சியம்மன் கோவில் வீதி சந்திப்பில் சாலையின் குறுக்கே கழிவுநீர் மற்றும் வடிகால் வாய்க்கால் பணிக்காக அதன் மீது இருந்த சிலாப்புகள் எடுக்கப்பட்டு சாலையில் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. சாலை மூடப்படவில்லை. அப்பகுதியில் மின் விளக்குகளும் எரியாமல் இருண்டு கிடந்தது.

இந்நிலையில், பைக்கில் வந்த வெங்கடேசன், சாலையில் கிடந்த சிளாப் கற்கள் மீது மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

போக்குவரத்து கிழக்கு பிரிவு போலீசார், வெங்கடேசன் தானே கிழே விழுந்து உயிரிழந்ததாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தேங்காய்த்திட்டு வசந்த் நகரில் வாய்க்கால் துார்வாரும் பணியின்போது, மின்துறை மதில் சுவர் இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டுமான பணிகளை மேற்கொள்ளும்போது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்கதையாக உள்ளது.








      Dinamalar
      Follow us