தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெட்டிக்கடையில் திருட்டு 4 வாலிபர்கள் கைது

பெட்டிக்கடையில் திருட்டு 4 வாலிபர்கள் கைது

பெட்டிக்கடையில் திருட்டு 4 வாலிபர்கள் கைது


ADDED : ஏப் 07, 2024 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2024 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : தியாகதுருகம் அருகே பெட்டிக்கடையில் திருடிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் அடுத்த காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி இருசாயி, 40; சித்தலுார் அங்காள பரமேஸ்வரி கோவில் அருகே தங்கி, பெட்டிக் கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார்.

நேற்று அதிகாலை 4:00 மணியளவில் சத்தம்கேட்டு எழுந்து பார்த்தபோது கடையில் கல்லா பெட்டியில் இருந்த 600 ரூபாயை 4 பேர் திருடிக் கொண்டிருந்தனர்.

உடன் கூச்சலிட்டதும், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 4 பேரையும் பிடித்து வரஞ்சரம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் தியாகதுருகத்தைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் மகன்கள் ராமகிருஷ்ணன், 18; பாலகிருஷ்ணன், 23; செல்வம் மகன் பாலாஜி, 20; ஏழுமலை மகன் சீனுவாசன், 24; என தெரியந்தது. நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us