ADDED : மே 14, 2024 05:19 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: தனிக்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில் 2ம் ஆண்டு செடல் திருவிழா நேற்று நடந்தது.
ஏம்பலம் அடுத்த தனிக்குப்பம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர், முத்துமாரியம்மன், நாகாத்தம்மன் கோவிலில் 2ம் ஆண்டு செடல் திருவிழா நேற்று நடந்தது.
இதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகள் நடந்தது. மாலை 3.00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. இதில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர், டிராக்டர், கார் உள்ளிட்ட வாகனங்களை அலகு குத்தி இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு 9.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை தனிக்குப்பம் கிராம மக்கள் செய்துள்ளனர்.
