sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

காலமுறை ஊதியம் வழங்க தி.மு.க., அரசுக்கு கசக்கிறதா? பா.ஜ., நாகேந்திரன் கேள்வி

/

காலமுறை ஊதியம் வழங்க தி.மு.க., அரசுக்கு கசக்கிறதா? பா.ஜ., நாகேந்திரன் கேள்வி

காலமுறை ஊதியம் வழங்க தி.மு.க., அரசுக்கு கசக்கிறதா? பா.ஜ., நாகேந்திரன் கேள்வி

காலமுறை ஊதியம் வழங்க தி.மு.க., அரசுக்கு கசக்கிறதா? பா.ஜ., நாகேந்திரன் கேள்வி

11


UPDATED : செப் 20, 2025 10:17 AM

ADDED : செப் 20, 2025 05:33 AM

Google News

11

UPDATED : செப் 20, 2025 10:17 AM ADDED : செப் 20, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'வீண் செலவுகளுக்கு, பணத்தை வாரி இறைக்கும் தி.மு.க., அரசுக்கு, சத்துணவு ஊழியர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்குவதற்கு மட்டும் கசக்கிறதா' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை


முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது, 'சத்துணவு , அங்கன்வாடி ஊழியர்களை, அரசு பணியாளர்களாக பணியமர்த்தி காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படும்' என, தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆளுங்கட்சியானதும் அவர்களுக்கு ஏமாற்றத்தை மட்டும் பரிசளிப்பது தான் பொற்கால ஆட்சியா.

வீண் செலவுகளுக்கும், வெற்று விளம்பரங்களுக்கும், பணத்தை வாரி இறைக்கும் தி.மு.க., அரசுக்கு, மழலைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும்.


சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதற்கு மட்டும் கசக்கிறதா. அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை வழங்காமல், அரசு கஜானாவை மட்டும் காலி செய்து, தமிழகத்தை நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கும் தி.மு. க., அரசை, தேர்தலில் , மக்கள் துரத்தியடிப்பது நிச்சயம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அக்., 1 முதல் யாத்திரை

தமிழகத்தில் மக்களை சந்தித்து, பா.ஜ.,வை பலப்படுத்த, அக்கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அக்., 1 முதல் தமிழகம் முழுதும் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். யாத்திரை பணிகளை ஒருங்கிணைக்க, மாநில பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம் தலைமையில், தனி குழுவை, தமிழக பா.ஜ., அலுவலக செயலர் சந்திரன் நியமித்துள்ளார். குழுவில், மாநில துணைத் தலைவர் ம.வெங்கடேசன், மாநில செயலர்கள் மீனாட்சி நித்யசுந்தர், கே.வெங்கடேசன் உட்பட ஒன்பது பேர் உள்ளனர். இக்குழுவினர், நயினார் நாகேந்திரனின் யாத்திரை செல்லும் இடங்களில், மாவட்டத் தலைவர்களுடன் ஆலோசித்து, ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வர்.








      Dinamalar
      Follow us