sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 புடவை வியாபாரி மீது போதை கும்பல் தாக்குதல்; திருத்தணியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

/

 புடவை வியாபாரி மீது போதை கும்பல் தாக்குதல்; திருத்தணியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

 புடவை வியாபாரி மீது போதை கும்பல் தாக்குதல்; திருத்தணியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

 புடவை வியாபாரி மீது போதை கும்பல் தாக்குதல்; திருத்தணியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

14


ADDED : ஜன 01, 2026 05:05 AM

Google News

14

ADDED : ஜன 01, 2026 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணியில் ஒடிஷா வாலிபரை, 'கஞ்சா' சிறுவர்கள் நான்கு பேர், சரமாரியாக அரிவாளால் வெட்டிய விவகாரம் ஓய்வதற்குள், அதே ஊரில், புடவை வியாபாரி ஒருவரை, போதை ஆசாமிகள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகே, கடந்த 27ம் தேதி, கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள், ஒடிஷா வாலிபர் சுராஜ், 20 என்பவரை அரிவாளால் வெட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பரப்பினர். பதைபதைக்க வைக்கும் வகையில் அந்த காட்சிகள் இருந்தன.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் போதை பொருட்களின் புகலிடமாக மாறி வருகிறது என, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக, நான்கு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட வடமாநில வாலிபர், 'டாக்டர்களிடம் எழுதி கொடுத்துவிட்டு, சொந்த ஊருக்கு சென்று விட்டார்' என, போலீசார் கூறினர்.

இந்த விவகாரம் ஓய்வதற்குள், திருத்தணி ரயில் நிலையத்தில் போதை ஆசாமிகள், நேற்று மீண்டும் ஒரு அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நேரு நகரைச் சேர்ந்தவர் ஜமால், 40; புடவை வியாபாரி. இவர், நேற்று முன்தினம் இரவு, திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த இரண்டு வாலிபர்கள், ஜமாலை, சரமாரியாக கைகளால் தாக்கிவிட்டு சென்றனர்.

தாக்குதலில் காயமடைந்த ஜமால், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரிடம், திருத்தணி போலீசார் விசாரித்தபோது, 'திருத்தணி ரயில் நிலையம் அருகே சிறுநீர் கழிக்க சென்றேன். எதற்காக என்னை அடித்தார்கள் என்றே தெரியவில்லை' என்றார்.

தாக்குதல் குறித்து, திருத்தணி போலீசாரும், ரயில்வே போலீசாரும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தனி போலீசார் திருத்தணி சம்பவத்தை அடுத்து, வட மாநில தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காண, காவல் நிலையம்தோறும் தனியாக எஸ்.ஐ., மற்றும் இரண்டு போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், வட மாநில தொழிலாளர்கள் தொடர்பான பதிவேடுகளையும் பராமரிப்பர் என, போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றவாளிகளுக்கு ஊக்கம் தரப்படுகிறது திருத்தணியில் நேற்று முன்தினம் மற்றொரு வன்முறை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜமால் என்ற வியாபாரி துாண்டுதல் அல்லது காரணமின்றி, ஒரு வன்முறை கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். சில ஆண்டுகளாக தமிழகத்தில் சட்ட விரோத செயல்கள் இயல்பாக்கப்படுகிறது. குற்றவாளிகளுக்கு ஊக்கம் தரப்பட்டு வருகிறது. சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில் தி.மு.க., அரசு தோல்வியை ஒப்புகொள்ளும் முன், இன்னும் எத்தனை சுராஜ், ஜமால் பாதிக்கப்பட வேண்டும். பொது பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. -- அண்ணாமலை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்



ஆளும் தகுதியை தி.மு.க., இழந்துவிட்டது திருத்தணி ரயில் நிலையத்தில் நடந்த இரு தாக்குதல்களுக்கும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கட்டுப்படுத்தாததே காரணம். தி.மு.க., ஆட்சியில், இளைஞர்களின் எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை; தரமான கல்வியை தரவில்லை. போதைப்பொருட்களை வெள்ளமாக பாயவிட்டு, இளைஞர்களை சீரழித்த வேதனையான சாதனையைத்தான் அரசு செய்துள்ளது. ஆளும் தகுதியை தி.மு.க., இழந்து விட்டது. வரும் தேர்தலில் இதை மக்கள் உறுதி செய்வர். - அன்புமணி, பா.ம.க., தலைவர்








      Dinamalar
      Follow us