sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

சகோதரர்கள் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே கைகோர்ப்பு!: மாநில நலனுக்காக 'ஈகோ'வை விடுவதாக அறிவிப்பு

/

சகோதரர்கள் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே கைகோர்ப்பு!: மாநில நலனுக்காக 'ஈகோ'வை விடுவதாக அறிவிப்பு

சகோதரர்கள் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே கைகோர்ப்பு!: மாநில நலனுக்காக 'ஈகோ'வை விடுவதாக அறிவிப்பு

சகோதரர்கள் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே கைகோர்ப்பு!: மாநில நலனுக்காக 'ஈகோ'வை விடுவதாக அறிவிப்பு

9


ADDED : ஏப் 20, 2025 01:19 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 01:19 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: கடந்த 19 ஆண்டுகளாக அரசியலில் எதிரெதிராக செயல்பட்டு வரும் சகோதரர்கள் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இணைந்து செயல்படுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளனர். மாநில நலனுக்காக, சொந்த 'ஈகோ'வை விடத் தயாராக இருப்பதாக இருவரும் கூறியுள்ளனர்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனா கட்சி, 2022ல் பிளவுபட்டது. ஏக்நாத் ஷிண்டே தனியாக பிரிந்து சென்றார். அவருடைய அணிக்கு, சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் கிடைத்தது.

பால் தாக்கரேயின் மகனான உத்தவ் தாக்கரே அணிக்கு, சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு என்று பெயரிடப்பட்டது.

முன்னதாக, பால் தாக்கரேயின் இளைய சகோதரரின் மகனான ராஜ் தாக்கரே, 2006ல் சிவசேனா கட்சியில் இருந்து வெளியேறினார். கட்சியில் உத்தவ் தாக்கரேவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால், எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய அவர், எம்.என்.எஸ்., எனப்படும் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற அரசியல் கட்சியைத் துவக்கினார்.

உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரேயின் தாயும் சகோதரிகள். கடந்த 19 ஆண்டுகளாக, உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே எதிரெதிர் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலத்தில் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தியை கற்றுத் தருவது கட்டாயமாக்கப் போவதாக அரசு அறிவித்தது. இதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில், மாநில நலனுக்காக சொந்த ஈகோவை விட்டு, இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளனர்.

கடந்த பிப்ரவரியில் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே சந்தித்து, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போதே, இருவரும் தங்களுடைய பழைய பகையை மறந்து செயல்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது இருவரும் இணைந்து செயல்படுவது குறித்து பேசியுள்ளனர். இது, மஹாராஷ்டிரா அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனமிருந்தால் போதும்!

பேட்டி ஒன்றில் ராஜ் தாக்கரே கூறியுள்ளதாவது:பொதுப் பிரச்னைகளுடன் ஒப்பிட்டால், எங்களுக்கு இடையே உள்ள சச்சரவுகள், மோதல்கள் மிகவும் சாதாரணமானவை. எங்களுடைய தனிப்பட்ட பிரச்னைகளை விட, மஹாராஷ்டிராவின் நலன் மிகப் பெரியது. மராத்தியர்கள் என்ற அடையாளத்துக்கு பாதிப்பு ஏற்பட விட மாட்டோம்.தேவைப்பட்டால் ஈகோவை விட்டு, உத்தவ் தாக்கரே உடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளேன். நாங்கள் இணைகிறோமோ, இணைந்து செயல்படுகிறோமோ என்பது ஒரு பெரிய விஷயமில்லை. மனமிருந்தால் போதும். இதற்கு அவர் தயாராக உள்ளாரா என்பதே கேள்வி.மராத்தியர்களுக்காக அரசியலை ஒதுக்கி வைத்து, அனைவரும் ஒரே அணியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



தயாராக உள்ளோம்!

மும்பையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:மஹாராஷ்டிரா மற்றும் மராத்திய மக்களுக்காக, எங்களுக்குள் உள்ள சிறிய கருத்து வேறுபாடுகளை ஒதுக்கித் தள்ள தயாராக உள்ளேன். மராத்தியர் என்ற அடையாளத்தை காக்க, அனைத்து மராத்தியர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ.,வுக்கு எதிராக நாங்கள் அணி திரண்டோம். அப்போதே, ராஜ் தாக்கரேயும் எங்களுடன் இருந்திருந்தால், மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்திருக்காது.ஒரு நாள் ஆதரவு தெரிவிப்பது, அடுத்த நாள் எதிர்ப்பது என்பது சரியல்ல. தேவையானபோது சமரசம் செய்யக் கூடாது. மஹாராஷ்டிரா நலனுக்கு எதிராக உள்ளவர்களையே நாங்கள் எதிர்க்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us