sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

'ஓட்டுக்கு நோட்டு'; எப்போது முற்றுப்புள்ளி?

/

'ஓட்டுக்கு நோட்டு'; எப்போது முற்றுப்புள்ளி?

'ஓட்டுக்கு நோட்டு'; எப்போது முற்றுப்புள்ளி?

'ஓட்டுக்கு நோட்டு'; எப்போது முற்றுப்புள்ளி?

4


UPDATED : ஏப் 21, 2024 04:07 AM

ADDED : ஏப் 20, 2024 11:48 PM

Google News

UPDATED : ஏப் 21, 2024 04:07 AM ADDED : ஏப் 20, 2024 11:48 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உறக்கத்தில் தட்டியெழுப்பி ஓட்டளிக்கச் சொன்னாலும், தான் சார்ந்துள்ள கட்சிக்கே ஓட்டளிக்கும், அரசியல் கட்சிகளின் அசைக்க முடியாத ஓட்டு வங்கிகள் ஒரு பக்கம்; குறிப்பிட்ட கட்சியின் ஓட்டு வங்கிகளாக அல்லாமல், மாற்றத்தை விரும்பி, ஒவ்வொரு தேர்தலிலும், மாறி, மாறி வாக்களிக்கும் மனநிலையில் உள்ள வாக்காளர்கள் இன்னொரு புறம்;'அதிக பணம், அன்பளிப்பு தரும் வாக்காளர்களுக்கே ஓட்டு' என்ற நிலையில் உள்ள வாக்காளர்கள் மற்றொரு புறம். இந்தச் சூழலுக்கிடையேதான், திருப்பூர் லோக்சபா தொகுதி தேர்தல் களத்தில், வேட்பாளர்கள், களமாடினர். போட்டி அனல் பறந்தது.

வீதி, வீதியாக தெரு, தெருவாக இறங்கி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்களின் கடைசி ஆயுதம், பணம் தான்.

'பணம், அன்பளிப்பு கொடுத்து, பெறும் ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கின்றன' என்பது, அரசியல்வாதிகளின் கணிப்பு, கணக்காக மாறிப் போயிருக்கிறது.

ரூ.30 கோடியைத் தாண்டி...


அரசியல் நோக்கர்கள் சிலர் கூறியதாவது: ஒரு லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், 95 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய, அதிகாரபூர்வ அனுமதியுண்டு. ஆனால், வேட்பாளர்கள் தொகுதிக்கு, 30 முதல், 50 கோடி ரூபாய் வரை செலவழிக்கின்றனர். சில தொகுதிகளில், அதற்கும் மேல் கூட, வேட்பாளர்கள் செலவழிக்கின்றனர்.

கட்சிக்காரர்களுக்கு பணம், அந்தந்த தொகுதியில் தங்களுக்கு ஆதரவளிக்கும் சிறிய சிறிய அமைப்புகள், சங்கங்களுக்கு நன்கொடை, கிராமப்புற மக்களின் ஓட்டுகளை கவர, அங்குள்ள கோவில்களுக்கு நன்கொடை, பிரசார வாகனம், ஒலி பெருக்கி வாடகை, அதில் ஓட்டு சேகரித்து செல்லும் பேச்சாளர்களுக்கு உணவு செலவு உட்பட கை செலவுக்கு பணம், கூட்டணி கட்சியினருக்கு என, வேட்பாளர்களின் செலவு பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

இதில், சில பெரிய கட்சிகள், தங்கள் வேட்பாளர்களுக்கு கட்சியில் இருந்து பணம் வழங்குகின்றன. உதாரணமாக, கட்சி சார்பில், 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டால், அந்த வேட்பாளர், 20 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும். இந்த நிபந்தனை அடிப்படையில் தான், சில கட்சிகள் வேட்பாளர்களையே தேர்வு செய்தன.

இதுபோன்ற சூழலில், தேர்தலுக்கு பணத்தை தண்ணீராய் செலவழிக்கும் வேட்பாளர்கள், கடைசியாக, வாக்காளர்களுக்கு பணம் தர முற்பட்டனர். திருப்பூரில் ஓட்டுப்பதிவு நாளுக்கு முந்தைய நாளில் துவங்கி, ஓட்டுப்பதிவு நாளின் இறுதிக்கட்டம் வரை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடந்துகொண்டேதான் இருந்தது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

சட்டசபை தேர்தலில் 'அள்ளிக்கொடுத்தனர்'

லோக்சபா தேர்தலில் 'கிள்ளிக்கொடுப்பதா?'கடந்த உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தலில், ஓட்டுக்கு, 500, 1,000 என, வேட்பாளர்கள் அள்ளிக் கொடுத்த நிலையில் இம்முறை, 250, 300 ரூபாய் என, கிள்ளிக் கொடுத்தனர். இது வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. 'போன தடவை, ஆயிரம் ரூபா கொடுத்தீங்க; இந்த முறை, ரொம்ப கம்மியா இருக்கே' என, வாய் கூசாமல் வாக்காளர்கள் பலரும் கேட்ட சம்பவமும் பல இடங்களில் நடந்திருக்கிறது. ஓட்டுக்கு நோட்டு வாங்கிய அனைவரும், அந்த கட்சிக்கு தான் ஓட்டளித்திருப்பர் என்பதை, அந்தந்த கட்சி நிர்வாகிகளாலேயே அறிந்து கொள்ள முடியவில்லை என்பது தான் வியப்பு.








      Dinamalar
      Follow us