sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

32 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை

/

32 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை

32 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை

32 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை


UPDATED : செப் 19, 2024 12:00 AM

ADDED : செப் 19, 2024 09:07 AM

Google News

UPDATED : செப் 19, 2024 12:00 AM ADDED : செப் 19, 2024 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், உயர் கல்வி பயிலும், மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான இறுதிச்சுற்று, கோவை பாரதியார் பல்கலையில் நேற்று நடந்தது.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமான இ.டி.ஐ.ஐ., இயக்குனர் அம்பலவாணன் கூறியதாவது:


இதுவரை, 32 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வாங்கப்பட்டுள்ளது. இதை மேலும் அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தொழில்முனைவோருக்காக ஐ.வி.பி., என்ற இன்னோவேஷன் வவுச்சர் புரோகிராம் வாயிலாக, 5 லட்சம் ரூபாய் வரை, நிதியுதவி வழங்கப்படுகிறது.

தொழில்முனைவோருக்காக சிறப்பு பயிற்சி வழங்கும் திட்டம், விரைவில் துவங்கப்பட உள்ளது. இதன் வாயிலாக அனைத்து தொழில் முனைவோரும், வரி செலுத்துதல், தொழில் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் பெறுவர்.

முன்னதாக, பாரதியார் பல்கலை, இ.டி.ஐ.ஐ., தமிழ்நாடு மண்டல மைய ஒருங்கிணைப்பாளர் விமலா, பல்கலை துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் லவ்லீனா லிட்டில் பிளவர், இ.டி.ஐ.ஐ., மாநில திட்ட மேலாளர் சண்முகராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், பல கல்லுாரி மாணவர்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.






      Dinamalar
      Follow us