sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றி விட்டோம்: அமித் ஷா பெருமிதம்

/

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றி விட்டோம்: அமித் ஷா பெருமிதம்

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றி விட்டோம்: அமித் ஷா பெருமிதம்

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றி விட்டோம்: அமித் ஷா பெருமிதம்

8


ADDED : ஜன 24, 2025 12:38 AM

Google News

ADDED : ஜன 24, 2025 12:38 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத் : ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது உட்பட, நிலுவையில் இருந்த கொள்கை ரீதியிலான திட்டங்களில் பெரும்பாலானவற்றை, கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள, குஜராத் பல்கலை மைதானத்தில், 'ஹிந்து அத்யாத்மிக் சேவா மேளா' எனப்படும், ஹிந்து ஆன்மிக கண்காட்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

ஹிந்துக்கள், சொந்த நாட்டில் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த தயங்கிய காலம் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிலை மாறியுள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

முத்தலாக் ஒழிப்பு, பொது சிவில் சட்டம் அமல் போன்ற நிலுவையில் இருந்த கொள்கை ரீதியிலான திட்டங்கள் செய்து முடிக்கப்பட்டு உள்ளன. கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசுகள் தொடத் தயங்கிய பணிகளை, மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளது.

தொடர்ச்சியான இந்த மூன்றாவது ஆட்சியிலும் அதே பாதையில் தொடர்வோம். இதுபோன்ற கண்காட்சி வாயிலாக, சேவை மனப்பான்மை உடைய ஹிந்து அமைப்புகளை ஒரே குடையின் கீழ் இணைத்துள்ள ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us