நீதித்துறையில் தொழில்நுட்ப பயன்பாடு : தலைமை நீதிபதி சந்திரசூட் பெருமிதம்
நீதித்துறையில் தொழில்நுட்ப பயன்பாடு : தலைமை நீதிபதி சந்திரசூட் பெருமிதம்
ADDED : மே 15, 2024 08:16 PM

புதுடில்லி
: நீதித்துறையில் தொழில்நுட்ப பயன்பாட்டினால் மிகப்பெரும் பலன்
கிடைத்துள்ளது. 7.50 லட்சம் வழக்குகள், 'வீடியோ கான்பரன்ஸ்'
வாயிலாக விசாரிக்கப்பட்டன. 1.50 லட்சம் வழக்குகள், 'ஆன்லைன்'
வாயிலாக பதிவு செய்யப்பட்டன. என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.
உலகின் பெரும் பொருளாதார
நாடுகளின், ஜி - 20 அமைப்பின் தலைமை பொறுப்பை, தென் அமெரிக்க நாடான
பிரேசில் இந்தாண்டு ஏற்றுள்ளது.
இந்த அமைப்பில் உள்ள
நாடுகளின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் இடையேயான ஜே - 20
சந்திப்பு கூட்டம் ரியோ டி ஜெனிரோவில் நடந்தது. இதில், உச்ச
நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பங்கேற்றார்.
அதில் அவர் பேசியதாவது:
டிஜிட்டல்
தொழில்நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்துவது, நீதித் துறை
செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளது. இது பலதரப்புக்கும் பெரும்
வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கொரோனா பரவலின்போது, ஆன்லைன்
வாயிலாக விசாரணை துவங்கியது. தற்போது நீதிமன்றங்களில் விவாதங்கள்
நடத்தப்பட்டாலும், வீடியோ கான்பரன்ஸ் வசதியும்
பயன்படுத்துகிறோம்.
இந்தியாவில் இதுவரை, 7.50 லட்சம் வழக்குகளை, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விசாரித்துள்ளோம்.
இதுவரை,
1.5 லட்சம் வழக்குகள் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனால் காகிதங்கள் பயன்பாட்டை குறைத்துள்ளோம்.. இவ்வாறு அவர்
பேசினார்.

