sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சென்னை ஐகோர்ட்டுக்கு இரண்டு நிரந்தர நீதிபதிகள்

/

சென்னை ஐகோர்ட்டுக்கு இரண்டு நிரந்தர நீதிபதிகள்

சென்னை ஐகோர்ட்டுக்கு இரண்டு நிரந்தர நீதிபதிகள்

சென்னை ஐகோர்ட்டுக்கு இரண்டு நிரந்தர நீதிபதிகள்

1


ADDED : செப் 17, 2025 03:12 AM

Google News

ADDED : செப் 17, 2025 03:12 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் செந்தில் குமார், அருள்முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க, உச்ச நீதிமன்றத்தின், 'கொலீஜியம்' பரிந்துரைத்துள்ளது.

உச்ச நீதிமன்றம் மற்றும் நாடு முழுதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் வழங்கி வருகிறது. இந்த கொலீஜியத்தின் கூட்டம், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் சமீபத்தில் நடந்தது.

இதில், ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களாக பணியாற்றும் ஜியா லால் பரத்வாஜ், ரொமேஷ் வர்மா ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்கவும்; கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நீதித் துறை அதிகாரிகளான கீதா கடபா பாரதராஜ செட்டி, முரளிதர பாய் போர்கட்டே, தியாகராஜ நாராயண் இனாவல்லி ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

மேலும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றும் நீதிபதி குருபரஹள்ளி வெங்கடராமரெட்டி அரவிந்தை நிரந்தர நீதிபதியாகவும்; திரிபுரா உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றும் நீதிபதி பிஸ்வஜித் பாலித்தை நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தது.

இதே போல், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் செந்தில் குமார், அருள் முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கவும் கொலீஜியம் பரிந்துரைத்தது.

- டில்லி சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us