sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தொழிலாளிகளின் முதலாளி : மனதை விட்டு நீங்காத ரத்தன் டாடா

/

தொழிலாளிகளின் முதலாளி : மனதை விட்டு நீங்காத ரத்தன் டாடா

தொழிலாளிகளின் முதலாளி : மனதை விட்டு நீங்காத ரத்தன் டாடா

தொழிலாளிகளின் முதலாளி : மனதை விட்டு நீங்காத ரத்தன் டாடா

48


UPDATED : அக் 10, 2024 10:27 PM

ADDED : அக் 10, 2024 03:15 AM

Google News

UPDATED : அக் 10, 2024 10:27 PM ADDED : அக் 10, 2024 03:15 AM

48


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தொழிலாளர்களுக்கு ஓடிஓடி உதவிய முதலாளியாக திகழ்ந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் நேற்று மும்பை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

1991 மார்ச்சில் டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்ற ரத்தன் டாடா, 2012 டிச., 28ல் ஓய்வு பெற்றார். அவரது பதவிக்காலத்தில், டாடா குழுமத்தின் வருவாய் பன்மடங்கு அதிகரித்தது. 1991ல் வெறும் 10,000 கோடி ரூபாய் இருந்த விற்றுமுதல், 2011- - 12ல், 100.09 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது. மேலும், ரத்தன் டாடா பொறுப்பில் இருந்தபோது, டெட்லி, கோரஸ், ஜாகுவார் லேண்ட்ரோவர் போன்ற நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டன.

சொந்த கார் என்ற கனவு ஏழைகளுக்கு எட்டாக் கனியாக இருந்ததை மாற்றியவர் ரூ.1 லட்சத்தில் டாடா நானோ காரை அறிமுகம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆண்டுதோறும் நன்கொடைகளை அள்ளி கொடுத்தார். பல்வேறு அறக்கட்டளைகளுக்கு டாடா நிறுவனம் சார்பில் கோடிக்கணக்கான பணம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

வாழும்போதே கோடிகளை கொட்டி தொழிலாளர்களுக்கு தொடர்ந்து உதவி வந்தார். ஏழைகளுக்கு உதவி செய்யும் குணத்தை கொண்ட ரத்தன் டாடா அள்ளி அள்ளி கொடுத்த நன்கொடைகள் ஏராளம்.

இந்தியாவில் கல்வி, மருத்துவம், குடிநீர், விவசாய துறைகள் மீது ரத்தன் டாடாவுக்கு தனி அக்கறை என்பது இருந்து வந்தது. கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் கல்வி, மருத்துவம், குடிநீர், விவசாயத்துக்கு தேவையான உதவிகளை தனது நிறுவனம் மூலம் ரத்தன் டாடா வழங்கினார்.

இப்படி பெரும் கோடீஸ்வரராக இருந்தாலும் கூட ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் மீது அக்கறையுடனே வாழ்ந்து தனது சகாப்தத்தை முடித்து கொண்டார். இதனால் ரத்தன் டாடா தொழிலாளிகளின் முதலாளி.

மறைந்த ரத்தன் டாடா 4 விஷயங்களுக்கு வெட்கப்படக்கூடாது என கூறியுள்ளார். அவர் சொன்ன 4 விஷயங்கள் என்ன என்பது கீழே தரப்பட்டுள்ளது.

ரத்தன் டாடா சொன்ன 4 விஷயங்கள்

01.பழைய ஆடைகள்; எந்த ஆடையும் உங்களின் திறமையை தீர்மானிக்காது, 02.ஏழை நண்பர்கள்: நட்பில் அந்தஸ்து என்பது ஓன்றுமில்லை, 03.வயதான பெற்றோர்: அவர்கள் தான் நீங்கள் இங்கு இருப்பதற்கு காரணம்,04. எளிய தோற்றம்: வெற்றியை தோற்றம் தீர்மானிப்பது இல்லை








      Dinamalar
      Follow us