sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

செபி தலைவர் மீது நேரம் வரும் போது நடவடிக்கை: மீண்டும் எச்சரிக்கிறார் ராகுல்

/

செபி தலைவர் மீது நேரம் வரும் போது நடவடிக்கை: மீண்டும் எச்சரிக்கிறார் ராகுல்

செபி தலைவர் மீது நேரம் வரும் போது நடவடிக்கை: மீண்டும் எச்சரிக்கிறார் ராகுல்

செபி தலைவர் மீது நேரம் வரும் போது நடவடிக்கை: மீண்டும் எச்சரிக்கிறார் ராகுல்

19


ADDED : அக் 29, 2024 07:56 AM

Google News

ADDED : அக் 29, 2024 07:56 AM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: செபி தலைவர் மாதவி புரி பூஜ் மீது நேரம் வரும்போது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: செபி தலைவர் மாதவி புரி பூஜ் என்ன காரணத்திற்காக ஐ.சி.ஐ.சி.ஐ.,யிடம் இருந்து பணம் பெற்றார்? செபி அமைப்பு தலைவராக இருக்கும் போது அவர் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் எப்படி பங்குகளை வைத்திருக்க முடியும்? ஸ்டார்ட்அப் இந்தியா நிறுவனத்திடம் இருந்து அந்த நிறுவனம் பல கோடி ரூபாய் பெற்றது ஏன்?

என்ன பயத்தால் அரசு இதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது? மாதவி புரி பூஜ் அதானியின் பணத்தையும், மதிப்பையும், நற்பெயரையும் பாதுகாக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆனால், செபி தலைவரை யார், ஏன் பாதுகாக்கிறார்கள்? இது குறித்து விசாரணை அமைப்புகள் விசாரிக்கவில்லை. ஊடகங்கள் கேள்வி கேட்கவில்லை. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் விசாரித்தோம். கேள்வியும் கேட்கிறோம். நேரம் வரும்போது நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

முன்னதாக...!

ஏற்கனவே, செபி தலைவர் பார்லி குழு முன் விசாரணைக்கு ஆஜராக ஏன் தயங்குகிறார்? செபி தலைவரை பாதுகாக்கும் பின்னணியில் இருப்பது யார்? என ராகுல் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us