sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாவகடாவில் சோலார் மின் உற்பத்தி திட்டம்

/

பாவகடாவில் சோலார் மின் உற்பத்தி திட்டம்

பாவகடாவில் சோலார் மின் உற்பத்தி திட்டம்

பாவகடாவில் சோலார் மின் உற்பத்தி திட்டம்


ADDED : டிச 17, 2024 05:01 AM

Google News

ADDED : டிச 17, 2024 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: ''துமகூரு, பாவகடா தாலுகாவில், 10,000 ஏக்கர் பரப்பளவில், சோலார் மின்சார திட்டத்தை துவக்கியுள்ளோம்,'' என மின்சாரத்துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்தார்.

மேல்சபை கேள்வி நேரத்தில், ம.ஜ.த., உறுப்பினர் திப்பேசாமியின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் ஜார்ஜ் கூறியதாவது:

ஏற்கனவே பாவகடாவில், இரண்டு ஏக்கரில், சோலார் மின்சாரம் உற்பத்தி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 10,000 ஏக்கர் நிலத்தில் சோலார் உற்பத்தி துவங்க திட்டமிட்டுள்ளோம். விவசாயிகள் திட்டத்தை செயல்படுத்த நிலம் வழங்க முன் வந்துள்ளனர். அவர்களிடம் குத்தகை அடிப்படையில் நிலம் பெறுவோம்.

மதுகிரியில் சோலார் மின்சாரம் திட்டம் கொண்டு வர வேண்டும் என, அமைச்சர் ராஜண்ணா வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அங்கு நிலம் கிடைக்காததால், பாவகடாவிலேயே திட்டத்தை செயல்படுத்த முன் வந்தோம்.

மாநிலத்தில் மொத்தம் 18,407 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 6,662 மெகாவாட் மின்சாரம், அனல் மின் உற்பத்தி நிலையங்கள், 940 மெகாவாட் மின்சாரம், நீர் மின் உற்பத்தி நிலையங்கள், 674 சோலார் மின் உற்பத்தி நிலையம் என, வெவ்வேறு வழிகளில் மின்சாரம் பெறப்படுகிறது.

மாநில விவசாயிகளின் நன்மைக்காக, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறுகளுக்கு சோலார் பம்ப் செட்கள் பொருத்த திட்டமிட்டுள்ளோம். விவசாயிகள் சோலார் பம்ப் பொருத்த, மத்திய அரசு 30 சதவீதம், மத்திய அரசு 50 சதவீதம் மானியம் வழங்குகிறது. விவசாயிகள் 20 சதவீதம் பணம் போட்டு, சோலார் பம்ப் செட் பொருத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us