sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தல் பத்திரங்கள் விபரம் தாக்கல் செய்தது எஸ்.பி.ஐ.,

/

தேர்தல் பத்திரங்கள் விபரம் தாக்கல் செய்தது எஸ்.பி.ஐ.,

தேர்தல் பத்திரங்கள் விபரம் தாக்கல் செய்தது எஸ்.பி.ஐ.,

தேர்தல் பத்திரங்கள் விபரம் தாக்கல் செய்தது எஸ்.பி.ஐ.,


ADDED : மார் 13, 2024 01:06 AM

Google News

ADDED : மார் 13, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவல்களையும், எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் கமிஷனிடம் நேற்று ஒப்படைத்தது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் வகையில் தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதன்படி, தனிநபர்கள், நிறுவனங்கள், தேர்தல் பத்திரங்களை வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும்.

கடந்த 2018ல் இருந்து, 30 தவணைகளில், 16,518 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை, இந்த திட்டத்தை செயல்படுத்தும் எஸ்.பி.ஐ., விற்றுள்ளது.

இந்த திட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது சட்டவிரோதமானது என்று அறிவித்தது.

மேலும், நன்கொடையாளர்கள் குறித்த விபரங்களை எஸ்.பி.ஐ., அளிக்க வேண்டும் என்றும், அதை தேர்தல் கமிஷன், தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த தகவல்களை அளிக்க, ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் கேட்டு, எஸ்.பி.ஐ., தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

மேலும், நேற்று மாலைக்குள், அனைத்து தகவல்களையும் தேர்தல் கமிஷனில் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இந்தத் தகவல்களை, தேர்தல் கமிஷன் 15ம் தேதி மாலைக்குள் இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட்டது.

இதன்படி, தேர்தல் பத்திரங்கள் விற்பனை, அதில் எவ்வளவு பணமாக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட தகவல்களை, தேர்தல் கமிஷனில் நேற்று மாலை எஸ்.பி.ஐ., அளித்தது. இதை உறுதி செய்து, தேர்தல் கமிஷன், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

ஜனாதிபதி தலையிட கோரிக்கை

தேர்தல் பத்திரம் விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆதிஷ் அகர்வாலா, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டபோது, நன்கொடையாளர்கள் பெயர்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், நன்கொடையாளர்கள் பெயர்களை வெளியிடும்படி கூறியுள்ளது.இது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு நன்கொடை அளித்த தொழில் நிறுவனங்கள் மீது, மற்ற கட்சிகள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திவிடும்.அரசியல் சாசனத்தின் 143வது பிரிவின்படி, ஒரு குறிப்பிட்ட விஷயத்தில், நாட்டின் நலன் கருதியும், பொதுமக்கள் நலன் கருதியும், உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை கேட்கும் உரிமை ஜனாதிபதிக்கு உள்ளது. அதை பயன்படுத்தி, இந்த தீர்ப்பை நிறைவேற்றுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, மறுஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us