sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 சபரிமலையில் ஜன.10 வரை தரிசன முன்பதிவு நிறைவு

/

 சபரிமலையில் ஜன.10 வரை தரிசன முன்பதிவு நிறைவு

 சபரிமலையில் ஜன.10 வரை தரிசன முன்பதிவு நிறைவு

 சபரிமலையில் ஜன.10 வரை தரிசன முன்பதிவு நிறைவு


ADDED : டிச 13, 2025 01:29 AM

Google News

ADDED : டிச 13, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை: சபரிமலையில் டிச. 27 மண்டலகாலம் நிறைவு நாள் வரையிலும், மகர விளக்கு சீசனில் ஜன., 10- வரையிலும் ஆன்லைன் முன்பதிவு நிறைவு பெற்றுவிட்டது. இனி ஜன. 11 முதல் ஜன. 19 வரையிலான முன் பதிவு தொடங்கும் நாளை பக்தர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நவ., 16- மாலை திறக்கப்பட்டது. 17-ல் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி நடக்கிறது. ஒரு சில நாட்களை தவிர்த்தால் மீதி எல்லா நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் இங்கு அலை மோதுகிறது. கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக தினமும் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

இதற்கிடையில் டிச. 27 மண்டல பூஜை தினத்தில் 35 ஆயிரம் பேருக்கும், அதற்கு முந்தைய நாள் 26 ல் 30 ஆயிரம் பேருக்கும் ஆன்லைன் அனுமதி வழங்கப்பட்டு நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. சில மணி நேரத்திலேயே அனைத்து நேரங்களுக்கான பதிவும் முடிந்துவிட்டது. தற்போதுள்ள நிலவரப்படி ஜன., 10 வரை முன்பதிவு முடிந்து விட்டது. இனி ஜன. 11 முதல் ஜன. 19 வரையிலான தரிசன முன்பதிவுக்கான டிக்கெட் இம்மாத இறுதியில்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பாட் புக்கிங் 5 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுவதால் அங்கு சென்றால் டிக்கெட் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் பக்தர்கள் பரிதவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us