sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரயிலில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்; திரிபுராவில் பரபரப்பு

/

ரயிலில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்; திரிபுராவில் பரபரப்பு

ரயிலில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்; திரிபுராவில் பரபரப்பு

ரயிலில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்; திரிபுராவில் பரபரப்பு


ADDED : மே 09, 2025 10:24 AM

Google News

ADDED : மே 09, 2025 10:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அகர்தலா: திரிபுராவில் ரயிலில் கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை இந்தியா தீவிரப்படுத்தப்படுத்திய நிலையில், விமான நிலையங்கள், ரயில்நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பயணிகளிடையே கடும் சோதனை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், பதர்பூரில் இருந்து அகர்தலா நோக்கி சென்று கொண்டிருந்த யு.பி., திரிபுரா சுந்தரி எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது, ரயிலின் மேல் படுக்கையில் வைக்கப்பட்டிருந்த 2 பேக்குகளை சோதனை செய்தனர்.

அதில், 8 துப்பாக்கிகளும், 16 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us