sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெமல் வேலைவாய்ப்பில் முன்னுரிமை தாய்மொழி கூட்டமைப்பு அழைப்பு

/

பெமல் வேலைவாய்ப்பில் முன்னுரிமை தாய்மொழி கூட்டமைப்பு அழைப்பு

பெமல் வேலைவாய்ப்பில் முன்னுரிமை தாய்மொழி கூட்டமைப்பு அழைப்பு

பெமல் வேலைவாய்ப்பில் முன்னுரிமை தாய்மொழி கூட்டமைப்பு அழைப்பு


ADDED : நவ 12, 2024 06:11 AM

Google News

ADDED : நவ 12, 2024 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: ''பெமல் தொழிற்சாலையில் கர்நாடக மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். உள்ளூர் தொழிலாளர்களை வஞ்சிக்கக் கூடாது. இதுகுறித்து முதல்வர் சித்தராமையா முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலையிடுமாறு வேண்டுகிறோம்,'' என, தாய் மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் தெரிவித்தார்.

பெமல் ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நிரந்தரம் கோரி, நேற்று 7வது நாளாக நடந்த போராட்டத்தில் அவர் கூறியதாவது:

தங்கச் சுரங்க தொழிலாளர் வாரிசுகளுக்காக 1964ல் உருவானது பெமல். இங்கு வட மாநிலத்தினருக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

கர்நாடகாவில் தமிழர்கள், கன்னடர்கள் ஒருங்கிணைந்து வாழும் தங்கவயலில் தமிழர் - - கன்னடருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பைப் பெற்று அவர்களை வஞ்சிக்கக் கூடாது.

இவர்கள் பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். வயது முதிர்ச்சியில் எந்த ஒரு சலுகையும் இல்லாமல் வெறுங்கையுடன் வெளியேற்றப்படுகின்றனர். இது கொடுமையானது.

இவர்களின் நியாயமான கோரிக்கைகளை, நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். இம்மாநில தமிழர் - கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us