sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியாவை பேச்சுக்கு அழைக்க பயங்கரவாதத்தை பயன்படுத்தும் பாக்.,: ஜெய்சங்கர்

/

இந்தியாவை பேச்சுக்கு அழைக்க பயங்கரவாதத்தை பயன்படுத்தும் பாக்.,: ஜெய்சங்கர்

இந்தியாவை பேச்சுக்கு அழைக்க பயங்கரவாதத்தை பயன்படுத்தும் பாக்.,: ஜெய்சங்கர்

இந்தியாவை பேச்சுக்கு அழைக்க பயங்கரவாதத்தை பயன்படுத்தும் பாக்.,: ஜெய்சங்கர்


UPDATED : ஜன 02, 2024 04:45 PM

ADDED : ஜன 02, 2024 01:13 PM

Google News

UPDATED : ஜன 02, 2024 04:45 PM ADDED : ஜன 02, 2024 01:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்க எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது என ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: பாகிஸ்தான் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வைத்து இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்க அழுத்தம் கொடுத்து வருகிறது. பயங்கரவாதத்தை தனது முக்கிய கொள்கையாக பாகிஸ்தான் வைத்துள்ளது. ஆனால், பாகிஸ்தானின் இத்தகைய விளையாட்டை நாம் விளையாடாமல் அதனை பொருத்தமற்றதாக ஆக்கிவிட்டோம்.

அண்டை நாடுகளை நாம் மாற்ற முடியாது. ஆனால், அவர்கள் முன்வைக்கும் பயங்கரவாத அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். நம்மை மிரட்டுவதற்காக பயங்கரவாதத்தை சட்டப்பூர்வமானது மற்றும் பயனுள்ளது என அவர்கள் நிர்ணயித்த விதிமுறைகளின் கீழ் பாகிஸ்தானை நாங்கள் கையாள மாட்டோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.






      Dinamalar
      Follow us