sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைப்பு

/

அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைப்பு

43


UPDATED : ஏப் 01, 2024 03:35 PM

ADDED : ஏப் 01, 2024 12:21 PM

Google News

UPDATED : ஏப் 01, 2024 03:35 PM ADDED : ஏப் 01, 2024 12:21 PM

43


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்.,15 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் திகார் சிறையில் 2ம் எண் அறையில் அடைக்கப்பட்டார்.

புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அவரை டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரியிருந்தது. இதனையடுத்து ஏப்ரல் 1ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அமலாக்கத்துறையின் காவல் இன்றுடன் முடியும் நிலையில், இன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்.,15 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 2ம் எண் அறை ஒதுக்கப்பட்டது. சிறையில் பகவத் கீதை மற்றும் புத்தகங்களை எடுத்து செல்ல அனுமதிக்குமாறு கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.

என்னென்ன வசதிகள்?

டில்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைக்கவுள்ள வசதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி,
* அவருக்கு மெத்தையுடன் கூடிய படுக்கை, காலை 6:30 மணிக்கு 'டீ' கொடுக்கப்படும்.
* இவரது சிறைக்கதவு சூரிய உதயத்திற்கு பின்னர் திறந்துவிடப்படும்.
* மதிய உணவு காலை 10:30 முதல் 11 மணி வரை வழங்கப்படும்.
* பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சிறைக்கதவு மூடப்படும்.
* மாலை 3:30 மணிக்கு டீ, இரண்டு பிஸ்கட்கள் கொடுக்கப்படும்.
* மீண்டும் சூரிய மறைவுக்கு பின்னர் சிறைக்கதவு மூடப்படும்.








      Dinamalar
      Follow us