sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆம்புலன்சில் ஏற்ற மறுப்பு பைக்கில் முதியவர் உடல்

/

ஆம்புலன்சில் ஏற்ற மறுப்பு பைக்கில் முதியவர் உடல்

ஆம்புலன்சில் ஏற்ற மறுப்பு பைக்கில் முதியவர் உடல்

ஆம்புலன்சில் ஏற்ற மறுப்பு பைக்கில் முதியவர் உடல்


ADDED : செப் 19, 2024 06:08 AM

Google News

ADDED : செப் 19, 2024 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு: உடல்நலக் குறைவால் உயிரிழந்த முதியவர் உடலை, ஆம்புலன்சில் ஏற்ற மறுத்ததால், பைக்கில் வைத்து மகன்கள் எடுத்து சென்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

துமகூரு, பாவகடா தலவாய்ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹொன்னுாரப்பா, 80; வயோதிகம், உடல்நலக் குறைவால் சில நாட்களாக படுத்த, படுக்கையாக இருந்தார்.

நேற்று அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. ஆம்புலன்சில் ஒய்.என்.ஹொஸ்கோட்டில் உள்ள, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

மருத்துவமனை முன் நின்ற ஆம்புலன்சில், ஹொன்னுாரப்பா உடலை எடுத்து செல்ல, அவரது மகன்கள் முடிவு செய்தனர்.

ஆனால் இறந்தவர் உடலை ஏற்ற மாட்டோம் என்று, ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ ஊழியர் கூறினர். அவர்களிடம் எவ்வளவோ பேசி பார்த்தும், பலன் இல்லை.

இதனால் ஹொன்னுாரப்பா உடலை பைக்கில் வைத்து, அவரது இரு மகன்கள் எடுத்து சென்றனர். ஒரு மகன் பைக் ஓட்டினார். ஹொன்னுாரப்பா உடலை நடுவில் அமர வைத்து, இன்னொரு மகன் பிடித்து இருந்தார்.

இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ ஊழியர் மீது, மக்கள் அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளனர்.

அமைச்சர்கள் பரமேஸ்வர், ராஜண்ணா இருவரும் துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் சொந்த ஊரில் இந்த அவலம் நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us