sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இதற்கு தான் சாதிவாரி கணக்கெடுப்பு வேணும்; அமித் ஷாவுக்கு சொல்கிறார் கார்கே!

/

இதற்கு தான் சாதிவாரி கணக்கெடுப்பு வேணும்; அமித் ஷாவுக்கு சொல்கிறார் கார்கே!

இதற்கு தான் சாதிவாரி கணக்கெடுப்பு வேணும்; அமித் ஷாவுக்கு சொல்கிறார் கார்கே!

இதற்கு தான் சாதிவாரி கணக்கெடுப்பு வேணும்; அமித் ஷாவுக்கு சொல்கிறார் கார்கே!

2


ADDED : அக் 02, 2024 12:41 PM

Google News

ADDED : அக் 02, 2024 12:41 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி; மக்கள் நலத்திட்டங்களுக்கு மட்டுமே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார்.

ஜம்முகாஷ்மீர் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பிறகு நிதானித்து தமது பேச்சை தொடர்ந்த அவர், பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை உயிரோடு இருப்பேன் என்று பேசினார்.

கார்கேவுக்கு பதிலடி தந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, இது கண்டிக்கத்தக்க பேச்சு என்று கூறி இருந்தார். இந் நிலையில் அமித் ஷாவின் கருத்துக்கு கார்கே பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது;

மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக தான் நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று வலியுறுத்துகிறோம். அதற்காக எங்களுக்கு தேசப்பற்று இல்லை என்று அர்த்தமாகாது. அவர்கள் (பா.ஜ.,) எப்போதும் நாட்டுக்கு எதிராகவும், அரசியலமைப்புக்கு எதிராகவும் செயல்படுபவர்கள்.

ஆனால், காங்கிரஸ் கட்சியில் தேசப்பற்றுள்ளவர்கள் தான் உள்ளனர். எனவே அவர்கள் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us