உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 09, 2024 11:05 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: 'மாநில அளவிலான போலீஸ் ஒட்டப்பந்தயத்தை ஒட்டி, இன்று காலை 6:00 மணிக்கே மெட்ரோ ரயில் சேவை துவங்கும்' என, பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பி.எம்.ஆர்.சி.எல்., வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரில் ஞாயிற்றுகிழமைகளில் மெட்ரோ ரயில் சேவை காலை 7:00 மணிக்கு தான் துவங்கும். ஆனால், நாளை (இன்று) மாநில அளவிலான கர்நாடகா போலீஸ் ஓட்டப்பந்தயம் போட்டி நடக்கிறது.
இதற்காக, இளஞ்சிவப்பு, பச்சை நிற வழித்தடங்களில் இன்று காலை 6:00 மணிக்கே மெட்ரோ ரயில் சேவை துவங்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
