ADDED : ஜூலை 27, 2025 08:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கட்டுமானத் தளத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
வடக்கு டில்லி, அலிப்பூர் பகோலி பாம்கிரீன் ரிசார்ட்டில் புதிய கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. அங்கு வேலை செய்த மோகன், 35, உயரத்திலிருந்து தவறி விழுந்தார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அருகிலுள்ள சத்யவாடி ராஜா ஹரீஷ் சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
தகவல் அறிந்து வந்த அலிப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோகன் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணை நடக்கிறது.

