sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர்

/

பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர்

பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர்

பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர்

31


UPDATED : ஏப் 20, 2025 03:56 AM

ADDED : ஏப் 20, 2025 03:52 AM

Google News

UPDATED : ஏப் 20, 2025 03:56 AM ADDED : ஏப் 20, 2025 03:52 AM

31


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: பிராமணர்களுக்கு எதிராக அவதுாறாக பேசியிருந்த இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப், தன் கருத்துக்கு நேற்று மன்னிப்பு கோரினார்.

இயக்குநர் அனந்த மஹாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலோக உள்ளிட்டோர் நடித்துள்ள ஹிந்தி படம் புலே.

ஜாதி மற்றும் பாலின சமத்துவமின்மைக்கு எதிராக போராடிய ஜோதிராவ், சாவித்ரி புலே தம்பதியின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் விதமாக எடுக்கப்பட்ட இந்த படம், ஜோதிராவ் புலேவின் 198வது பிறந்த நாளான ஏப்., 11ல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த படத்தில் பிராமணருக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக சில பிராமண அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய தணிக்கை வாரியமும் ஒருசில காட்சிகளை நீக்குமாறு இயக்குநரை அறிவுறுத்தியது.

இதையடுத்து, புலே படம் வரும் 25ம் தேதி வெளியாக உள்ளது. இந்த சூழலில், பிரபல ஹிந்தி பட இயக்குநரும், லியோ, மஹாராஜா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவருமான அனுராக் காஷ்யப் புலே படத்துக்கு ஆதரவாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

மோசடி அமைப்பு


அதில், 'பிராமணர்கள் புலே படத்தை ஏன் எதிர்க்கின்றனர்? ஜாதியை ஒழித்துவிட்டதாகச் சொல்கிறீர்களே, ஜாதிகளே இல்லையென்றால் நீங்கள் எப்படி பிராமணர்கள் ஆவீர்கள்? நீங்கள் யார்? ஏன் படத்தை எதிர்க்கிறீர்கள்? ஜாதிகளே இல்லையெனில் சாவித்ரிபாய், ஜோதிராவ் புலே ஏன் போராடினர்? திரைப்பட சான்றிதழ் வாரியம் ஒரு மோசடி அமைப்பு.

'இந்தியாவில் ஜாதி இருக்கா... இல்லையா என்று அனைவரும் கூடி ஒரு முடிவுக்கு வாருங்கள்' என, பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவுக்கு பலரும் கேள்வி கேட்டு வந்ததால் கடுப்பான அனுராக் காஷ்யப், பிராமணர்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்தார். இதற்கு, பிராமண அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து அனுராக் காஷ்யப், அவரின் குடும்பத்தினர், நண்பர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தன் கருத்துக்கு அவர் நேற்று மன்னிப்பு கோரியுள்ளார்.

கொலை மிரட்டல்


அவர் கூறியுள்ளதாவது:

இது என் மன்னிப்பு. ஆனால், இது என் பதிவுக்காக அல்ல. முக்கியமானவற்றை விட்டுவிட்டு ஒரு வரியை எடுத்துக்கொண்டு வெறுப்பைப் பரப்புகின்றனர். நான் பேசியதிலிருந்து பின் வாங்கமாட்டேன். என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுங்கள்.

என் குடும்பம் எதுவுமே சொல்லவில்லை. உங்களுக்கு மன்னிப்பு வேண்டுமானால் இதோ இங்கிருக்கிறது.

ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த முக்கியமான நபர்களிடம் இருந்து என் மகள், குடும்பம், நண்பர்கள், உடன் வேலை செய்பவர்களுக்கு கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை போன்ற மிரட்டல்கள் வருவது சரியில்லை.

பிராமணர்களே தயவுசெய்து பெண்களை விட்டுவிடுங்கள். மனுஸ்மிருதி உட்பட அனைத்து வேதங்களும் கண்ணியத்தை கற்பிக்கின்றன. நீங்கள் உண்மையில் எந்த வகையான பிராமணர்கள் என்பதை நீங்களே முடிவு எடுத்து கொள்ளுங்கள். நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us