sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வீரர்களின் துணிச்சலை நினைவூட்டும் கார்கில் வெற்றி தினம்: தியாகத்தை நினைவு கூர்ந்த மோடி!

/

வீரர்களின் துணிச்சலை நினைவூட்டும் கார்கில் வெற்றி தினம்: தியாகத்தை நினைவு கூர்ந்த மோடி!

வீரர்களின் துணிச்சலை நினைவூட்டும் கார்கில் வெற்றி தினம்: தியாகத்தை நினைவு கூர்ந்த மோடி!

வீரர்களின் துணிச்சலை நினைவூட்டும் கார்கில் வெற்றி தினம்: தியாகத்தை நினைவு கூர்ந்த மோடி!

3


UPDATED : ஜூலை 26, 2025 12:17 PM

ADDED : ஜூலை 26, 2025 11:05 AM

Google News

3

UPDATED : ஜூலை 26, 2025 12:17 PM ADDED : ஜூலை 26, 2025 11:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''கார்கில் போர் நினைவு தினம், வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலை நினைவூட்டுகிறது'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் லடாக் யூனியனில் உள்ள கார்கில் மலைப் பகுதியை குறுக்கு வழியில் ஆக்கிரமித்த பாகிஸ்தானை அடித்து விரட்டி நம் ராணுவ வீரர்கள் 1999 ஜூலை 26ல் வெற்றிக் கொடி நாட்டினர். போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று கார்கில் தினத்தையொட்டி, பிரதமர் மோடி சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கார்கில் போர் நினைவு தினம், வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலை நினைவூட்டுகிறது. நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள்.

தாய்நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த வீரர்களின் நினைவுகள் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் முன்மாதிரியாகவும், ஊக்கமும் அளிக்கும். ஜெய் ஹிந்த். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

போர் நினைவிடத்தில் மரியாதை

டில்லியில் உள்ள போர் நினைவிடத்தில், கார்கில் போர் நினைவு தினத்தையொட்டி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். முன்னதாக, அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கார்கில் தினத்தன்று, நாட்டின் கவுரவத்தைப் பாதுகாப்பதில் துணிச்சல், மன உறுதியை வெளிப்படுத்திய நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். கார்கில் போரில் நமது ஆயுதப் படைகள் வெளிப்படுத்திய உறுதி மற்றும் தியாகம் காலத்தால் அழியாத நினைவூட்டல், அவர்களின் சேவைக்கு இந்தியா என்றும் கடமைப்பட்டிருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தியாகத்தை போற்றுவோம்!

கார்கில் வெற்றி தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: நமது தமிழகத்தை காக்க இன்னுயிரை தந்த வீரர்களின் தியாகத்தை போற்றுவோம். நமது ராணுவ வீரர்களின் வீரமும், தியாகமும் வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us