sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பானை வடிவில் காட்சியளிக்கும் கலசேஸ்வரா!

/

பானை வடிவில் காட்சியளிக்கும் கலசேஸ்வரா!

பானை வடிவில் காட்சியளிக்கும் கலசேஸ்வரா!

பானை வடிவில் காட்சியளிக்கும் கலசேஸ்வரா!


ADDED : செப் 24, 2024 07:13 AM

Google News

ADDED : செப் 24, 2024 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தட்சிண காசி' என்று அழைக்கப்படும் கலசேஸ்வரா கோவில், சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தாலுகா, கலசா சாலையில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளை கடந்து செல்லும் ரம்மியமான இயற்கை காட்சிகள், காபி, ஏலக்காய் செடிகளை பார்த்து கொண்டே செல்வது மனதிற்கும் இதமாக இருக்கும்.

வெள்ளி கதவு


இயற்கை அன்னையின் மடியில் அருள் பாலிக்கும் இந்த கோவில், பத்ரா ஆற்றங்கரையில் உள்ளது. அகஸ்தியர் முனியால் கட்டியதாக நம்பப்படுகிறது. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் படி, 1,154ல் கட்டப்பட்டதாக சில கல்வெட்டுகள் கூறுகின்றன.

மூலஸ்தானத்தை விதர்பா சிற்றரசர் ஸ்ருத் பிந்து நிறுவியதாக கூறப்படுகிறது. அதன்பின், 16ம் நுாற்றாண்டில் கெலதி மற்றும் கார்காலா நாயக்கர்கள் மேம்படுத்தி உள்ளனர். பின், மைசூரு மன்னர்கள் வெள்ளி கதவை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

'தட்சிண காசி'


சுவாமிக்கு, தங்க கிரீடத்தை சோமசேகர் நாயக்கர் சமர்ப்பணம் செய்துள்ளார். வசிஷ்டா, நாகா, கோடி, ருத்ரா, அம்பா ஆகிய பஞ்ச புனித குளங்கள் இருப்பது சிறப்பு.

ஸ்கந்த புராணத்தில், கலசேஸ்வரா கோவில் 'தட்சிண காசி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் உள்ள லிங்கம் பானை அல்லது கலசம் வடிவில் காட்சி அளிக்கிறது. இதனால், கலசேஸ்வரா என்று அழைக்கப்படுகிறது.

தியான மண்டபம், நிகழ்ச்சி அரங்கம், பழங்கால கல்வெட்டுகளை காணலாம்.

கட்டுப்பாடு

கோவிலின் மாண்பை கவுரவிக்கும் வகையில், ஆண்கள் வேட்டி அணிந்து வர வேண்டும்; சட்டை அணிய கூடாது. பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிந்து வர வேண்டும்.



சிக்கமகளூரில் இருந்து 84 கி.மீ., துாரத்தில் கலசேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. மங்களூரு விமான நிலையத்தில் இருந்து 120 கி.மீ., துாரத்தில் உள்ளது. சாலை மார்க்கமாக, பஸ், கார்களில் செல்லலாம். இதற்கு 3 மணி நேரம் ஆகும்.

மங்களூரு, சிக்கமகளூரில் டாக்சி கிடைக்கும். அரசு பஸ் வசதியும் உண்டு. ஷிவமொகா ரயில் நிலையத்தில் இறங்கி, 120 கி.மீ., துாரம் பஸ், டாக்சியிலும் வரலாம். ஹாசனின் சக்லேஸ்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 92 கி.மீ., துாரத்தில் உள்ளது. சிருங்கேரியில் இருந்து, நேரடி பஸ் சேவை உள்ளது. கலசேஸ்வரா கோவிலுக்கு வருவோர், இங்கிருந்து 6.5 கி.மீ., துாரத்தில் இருக்கும் ஹொரநாடு அன்னபூர்னேஸ்வரி கோவிலையும் தரிசனம் செய்யலாம்.



கோவில் நேரம்

தினமும் காலை 7:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை கோவில் திறந்திருக்கும். மதியம் 1:00 மணி முதல் 3:30 மணி வரை ஒன்றரை மணி நேரம், மதிய உணவு இடைவேளை இருக்கும்.தினமும் பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படும். மஹாசிவராத்திரி மற்றும் முக்கிய தினங்களில் இரவு 8:30 மணியை தாண்டியும், பக்தர்கள் இருக்கும் வரை திறந்திருக்கும். ஆண்டுதோறும் நடத்தப்படும்கலசா திருவிழாவின் போது, மஹா ரத உற்சவம் நடக்கும். அப்போது, ஏராளமான பக்தர்கள் வருவர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us