sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பஹல்காம் தாக்குதலுக்கு விசாரணையா: கோர்ட் கண்டிப்பு

/

பஹல்காம் தாக்குதலுக்கு விசாரணையா: கோர்ட் கண்டிப்பு

பஹல்காம் தாக்குதலுக்கு விசாரணையா: கோர்ட் கண்டிப்பு

பஹல்காம் தாக்குதலுக்கு விசாரணையா: கோர்ட் கண்டிப்பு

1


ADDED : மே 02, 2025 12:40 AM

Google News

ADDED : மே 02, 2025 12:40 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த அமைப்பு மற்றும் இரு வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன அதில், 'பயங்கரவாத தாக்குதலை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு நீதித்துறை கமிஷனை அமைக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் கூறியதாவது:

பஹல்காம் தாக்குதல் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை விசாரிக்கச் சொல்கிறீர்கள். இதுபோன்ற பொதுநல வழக்குகளை தாக்கல் செய்யும் முன், பொறுப்புடன் இருங்கள். உங்களுக்கும், சில கடமைகள் உள்ளன.

ராணுவத்தின் மன உறுதியை நீங்கள் குலைக்க விரும்புகிறீர்களா? நீதிபதிகள் புலன் விசாரணையில் நிபுணத்துவம் பெற்றுள்ளவர்களா என்ன?

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் கைகோர்த்திருக்கும் முக்கியமான நேரம் இது. ராணுவத்தின் மன உறுதியை சீர்குலைக்கும் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்யாதீர்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதையடுத்து, பஹல்காம் தாக்குதல் தொடர்பான பொதுநல மனுக்களை அனைவரும் வாபஸ் பெற்றனர்.






      Dinamalar
      Follow us