sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அவரவர் நாட்டு கரன்சி அடிப்படையில் வர்த்தகம்; இந்தியா, மொரீஷியஸ் முடிவு

/

அவரவர் நாட்டு கரன்சி அடிப்படையில் வர்த்தகம்; இந்தியா, மொரீஷியஸ் முடிவு

அவரவர் நாட்டு கரன்சி அடிப்படையில் வர்த்தகம்; இந்தியா, மொரீஷியஸ் முடிவு

அவரவர் நாட்டு கரன்சி அடிப்படையில் வர்த்தகம்; இந்தியா, மொரீஷியஸ் முடிவு

1


ADDED : செப் 11, 2025 02:55 PM

Google News

1

ADDED : செப் 11, 2025 02:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாரணாசி: ''இந்தியாவும், மொரீஷியஸூம் அந்தந்த நாடுகளின் கரன்சியை கொண்டு வர்த்தகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்று பிரதமர் மோடி கூறினார்.

உத்தரபிரதேசம் சென்றுள்ள பிரதமர் மோடியுடன், மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் சந்தித்து பேசினார்.

இருதரப்பு சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது:எனது லோக்சபா தொகுதியில் உங்களை வரவேற்பதில் பெருமைப்படுகிறேன். பல நூற்றாண்டுகளாக, இந்தியாவின் நாகரிகம் மற்றும் கலாசாரத்தின் அடையாளமாக காசி இருந்து வருகிறது. நமது மரபுகள் மற்றும் மதிப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மொரிஷியஸை அடைந்து அதன் வாழ்க்கை முறையில் ஆழமாக வேரூன்றியுள்ளன.

நமக்கும் மொரீஷியஸ் நாட்டுக்கும் இருப்பது உணர்ச்சிபூர்வமான பிணைப்பு. நம் இரு நாடுகளும் வெறும் கூட்டாளிகள் மட்டும் அல்ல, இரு நாடுகளும் ஒரு குடும்பம் என்று நான் பெருமையுடன் கூறுகிறேன். மொரீஷியஸின் வளர்ச்சியில் இந்தியா நம்பகமான மற்றும் முன்னுரிமை கொண்ட பங்குதாரராக இருப்பது பெருமைக்குரிய விஷயம். இன்று, மொரீஷியஸின் தேவைகளை மனதில் கொண்டு, ஒரு சிறப்பு பொருளாதார தொகுப்பை வழங்க நாம் முடிவு செய்துள்ளோம். இந்த தொகுப்பு உதவி அல்ல, இது நமது பகிரப்பட்ட எதிர்காலத்தில் ஒரு முதலீடு.

மொரீஷியஸ், தொலைநோக்குப் பார்வை கொண்ட மகாசாகர் முன்னெடுப்பின் ஒரு முக்கிய தூண். இன்று, எங்கள் இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் நாங்கள் விரிவான மதிப்பாய்வு செய்தோம். பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் நாங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.

இந்தியா எப்போதும் காலனித்துவ நீக்கத்தையும் மொரீஷியஸின் இறையாண்மையை முழுமையாக அங்கீகரிப்பதையும் ஆதரித்துள்ளது.மேலும் இந்த விஷயத்தில் மொரீஷியஸுடன் நாங்கள் தொடர்ந்து உறுதியாக நிற்கிறோம்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை, அந்தந்த நாட்டு கரன்சியில் மேற்கொள்வது பற்றி விவாதித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.






      Dinamalar
      Follow us