sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஐசியூவுக்கு மாற்றப்படும் ஆபத்தான நிலையில் இண்டியா கூட்டணி: உமர் அப்துல்லா

/

ஐசியூவுக்கு மாற்றப்படும் ஆபத்தான நிலையில் இண்டியா கூட்டணி: உமர் அப்துல்லா

ஐசியூவுக்கு மாற்றப்படும் ஆபத்தான நிலையில் இண்டியா கூட்டணி: உமர் அப்துல்லா

ஐசியூவுக்கு மாற்றப்படும் ஆபத்தான நிலையில் இண்டியா கூட்டணி: உமர் அப்துல்லா

15


ADDED : டிச 06, 2025 07:31 PM

Google News

15

ADDED : டிச 06, 2025 07:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இண்டியா கூட்டணி, ஆபத்தான நிலையில் உள்ளது, மேலும் ஐசியூவுக்கு மாற்றப்படக்கூடிய அபாயத்தில் உள்ளது என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

டில்லியில் இன்று நடைபெற்ற ஆங்கில நாளிதழ் தலைமைத்துவ மாநாட்டில் உமர் அப்துல்லா பேசியதாவது:

கூட்டணியில் உள்ள உட்பூசல்கள், பாஜவின் தொடர்ச்சியான தேர்தல் முயற்சிகளுக்கு ஈடு கொடுக்க முடியாததால், இண்டியா கூட்டணி ஆபத்தான நிலையில் இருக்கிறது, அது அவசர சிகிச்சை பிரிவான ஐசியூவுக்கு மாற்றப்படக்கூடிய ஆபத்தில் உள்ளது.இண்டியா கூட்டணியில் அமைப்பு ரீதியான, தொடர் தோல்விகளை சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.

இந்த தொடர் தோல்விக்கு, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியது, பீஹாரில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) தொகுதி பங்கீட்டில் விலக்கப்பட்டது ஆகிய நடவடிக்கைகள் இண்டியா கூட்டணிக்குள் முக்கிய பிரச்னையாக இருந்தது. பாஜவில் வலுவான உழைக்கும் நெறிமுறைகள் இருக்கிறது. அந்த வேகத்துடன் பாஜ ஒவ்வொரு தேர்தலிலும் உறுதியுடன் போட்டியிடுகிறது. அதேவேளையில் இண்டியா கூட்டணியில் கட்சிகள் சில சமயங்களில் அலட்சியமாக செயல்படுவது தெரியவருகிறது.

இவ்வாறு உமர் அப்துல்லா பேசினார்.






      Dinamalar
      Follow us