ADDED : பிப் 07, 2024 11:08 PM
பெங்களூரு: 'சக்தி' திட்டத்தின் கீழ், பெண்களுக்கு தனியாக 'பிங்' பஸ்களை இயக்க அரசு ஆலோசிக்கிறது.
இதுகுறித்து மாநில போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடக காங்கிரஸ் அரசு, பெண்களின் வசதிக்காக 'சக்தி' திட்டத்தை செயல்படுத்தியது. திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில், பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி. உட்பட, நான்கு போக்குவரத்துக் கழகங்களின் பஸ்களில், இதுவரை 259 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர்.
மாநிலம் முழுதும், தினமும் 60 முதல் 63 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். இவர்களின் வசதிக்காக, தனி 'பிங்' பஸ்களை இயக்க அரசு ஆலோசிக்கிறது. பி.எம்.டி.சி.,யில் சோதனை முறையில் 'பிங்' பஸ் இயக்கப்படுகிறது. நடப்பாண்டு 1,000த்துக்கும் மேற்பட்ட பஸ்கள் வாங்கப்படுகின்றன. இவற்றில் சில பஸ்களை 'பிங்' பஸ்களாக மாற்றி, பெண்களுக்கு ஒதுக்க ஆலோசிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

