அட்டாரி-வாகாவில் ‛‛ஜெய்ஹிந்த்'' முழக்கத்துடன் நடந்த கொடியிறக்கும் நிகழ்வு
அட்டாரி-வாகாவில் ‛‛ஜெய்ஹிந்த்'' முழக்கத்துடன் நடந்த கொடியிறக்கும் நிகழ்வு
ADDED : ஜன 26, 2024 06:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாகா: குடியரசு தினத்தையொட்டி அட்டாரி - வாகாவில் ‛‛ஜெய்ஹிந்த் '' முழக்கத்துடன் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுது.
75-வது குடியரசு தினம் இன்று நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மூவர்ண கொடியை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து டில்லி கடமை பாதையில் நம் நாட்டின் பெருமையை விளக்கும் பல்வேறு அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்து பிரம்மிக்க வைத்தன.
இதை கொண்டாடும் விதமாக இந்தியா -பாக். சர்வதேச எல்லையான அட்டாரி-வாகாவில் பாரம்பரிய முறைப்படி இன்று கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வை பல்லாயிரக்ணக்கானோர் கண்டு ரசித்தனர். அப்போது ‛‛ஜெய்ஹிந்த்' என முழுக்கமிட்டு நம் வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

