sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாக்., தலைவர்களின் மொழியைப் பயன்படுத்தும் காங்கிரஸ்; பட்னாவிஸ் குற்றச்சாட்டு

/

பாக்., தலைவர்களின் மொழியைப் பயன்படுத்தும் காங்கிரஸ்; பட்னாவிஸ் குற்றச்சாட்டு

பாக்., தலைவர்களின் மொழியைப் பயன்படுத்தும் காங்கிரஸ்; பட்னாவிஸ் குற்றச்சாட்டு

பாக்., தலைவர்களின் மொழியைப் பயன்படுத்தும் காங்கிரஸ்; பட்னாவிஸ் குற்றச்சாட்டு

1


ADDED : ஜூலை 30, 2025 08:35 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 08:35 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: பாகிஸ்தான் தலைவர்களின் மொழியை, ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பயன்படுத்துவதாக மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

நீண்ட அமளிகளுக்குப் பிறகு ஆபரேஷன் சிந்தூர் குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று (ஜுலை 29) லோக் சபாவில் நடந்த விவாதத்த்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார். பாகிஸ்தானை நம்பி காங்கிரஸ் இருப்பதாகவும், மக்கள் மனங்களில் சந்தேக விதைகளை விதைக்க காங்கிரஸ் முயற்சி செய்வதாக பிரதமர் குற்றம்சாட்டியிருந்தார்.

இன்று ராஜ்யசபாவில் காங்கிரஸின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆபரேஷன் சிந்தூர் குறித்து காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது; பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் பற்றி முழு உண்மையை வெளிப்படுத்தி விட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு மகாதேவை வெறுப்பது ஒரு வழக்கமாகிவிட்டது. இதற்கு நான் என்ன செய்ய முடியும்?. காங்கிரஸ் தலைவர்கள், பாகிஸ்தான் தலைவர்களின் மொழியையே பயன்படுத்துகிறார்கள், இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us