sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நக்சல் பிரச்னைகளில் இருந்து விரைவில் இந்தியா விடுபடும்: அமைச்சர் அமித் ஷா

/

நக்சல் பிரச்னைகளில் இருந்து விரைவில் இந்தியா விடுபடும்: அமைச்சர் அமித் ஷா

நக்சல் பிரச்னைகளில் இருந்து விரைவில் இந்தியா விடுபடும்: அமைச்சர் அமித் ஷா

நக்சல் பிரச்னைகளில் இருந்து விரைவில் இந்தியா விடுபடும்: அமைச்சர் அமித் ஷா

7


ADDED : செப் 15, 2025 05:29 PM

Google News

7

ADDED : செப் 15, 2025 05:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஞ்சி: நக்சல் பிரச்னைகளில் இருந்து இந்தியா மிக விரைவில் விடுபடும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில், சிஆர்பிஎப் படையின் கோப்ரா பட்டாலியன் மற்றும் மாநில காவல்துறையின் கூட்டுக் குழு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையில், ரூ.1 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் முக்கியப்புள்ளி சஹ்தேவ் சோரன் என்ற பர்வேஷ் ஒழிக்கப்பட்டுள்ளான்.

கூடுதலாக சஞ்சல் என்ற ரகுநாத் ஹெம்பிராம் மற்றும் ராம்கேலவன் என்ற பிர்சென் கஞ்சு ஆகியோரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து, வடக்கு ஜார்க்கண்டில் உள்ள பொகாரோ பகுதியில் இருந்து நக்சல்வாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. விரைவில், முழு நாடும் நக்சல் பிரச்னையிலிருந்து விடுபடும்.

இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us