இதோ வந்தாச்சு பஞ்சாயத்து! அதிஷி ஒரு டம்மி சி.எம்.! எகிறிய ஆம் ஆத்மி எம்.பி.
இதோ வந்தாச்சு பஞ்சாயத்து! அதிஷி ஒரு டம்மி சி.எம்.! எகிறிய ஆம் ஆத்மி எம்.பி.
ADDED : செப் 17, 2024 01:53 PM

புதுடில்லி; அதிஷி ஒரு டம்மி முதல்வர் என்று ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி., சுவாதி மாலிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராஜினாமா
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மாட்டிய கெஜ்ரிவால் ஒருவழியாக ஜாமினில் வெளி வந்துள்ளார். அவருக்கு கடும் நிபந்தனைகளை கோர்ட் விதித்துள்ள நிலையில் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
முதல்வர் அதிஷி
அவருக்கு பின் டில்லி முதல்வராக யார் பொறுப்பேற்பார் என்ற கேள்வி எழுந்தது. கட்சி எம்.எல்.ஏக்களுடன் நடந்த ஆலோசனைக்கு பின்னர் முறைப்படி அதிஷி மர்லேனா புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டார். இவர் கெஜ்ரிவால் அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சராக இருந்தவர்.
எதிர்ப்புக்குரல்
கட்சியின் ஒருமனது முடிவு என்று அறிவிக்கப்பட்டாலும் ஆம் ஆத்மிக்கு உள்ளே இருந்து எதிர்ப்புக்குரலும் எழுந்துள்ளது. இந்த குரலை எழுப்பி இருப்பவர் ராஜ்ய சபா எம்.பி., சுவாதி மாலிவால். இது குறித்து தமது எக்ஸ் வலை தளத்தில் அவர் கூறி இருப்பதாவது;
சோகமான நாள்
டில்லிக்கு இன்று சோகமான நாள். தீவிரவாதி அப்சல் குருவை தூக்கிலிடாமல் காப்பாற்றுவதற்காக அதிஷி குடும்பத்தினர் போராடினர். அதில் இருந்து வந்தவர் அதிஷி. அவர் தான் இப்போது முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
டம்மி முதல்வர்
அப்சல் குரு நிரபராதி, சதி செய்து அவர் சிக்க வைக்கப்பட்டார் என்று அவரை காப்பாற்ற அதிஷி பெற்றோர் ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பியவர்கள். அதிஷி ஒரு டம்மி முதல்வர். இருந்தாலும், இந்த விஷயம் ஒரு நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. கடவுள் டில்லியை காக்கட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

