sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பஹல்காமுக்கு சுற்றுலா வருவதை நிறுத்திவிடாதீங்க: கரண் சிங் வேண்டுகோள்

/

பஹல்காமுக்கு சுற்றுலா வருவதை நிறுத்திவிடாதீங்க: கரண் சிங் வேண்டுகோள்

பஹல்காமுக்கு சுற்றுலா வருவதை நிறுத்திவிடாதீங்க: கரண் சிங் வேண்டுகோள்

பஹல்காமுக்கு சுற்றுலா வருவதை நிறுத்திவிடாதீங்க: கரண் சிங் வேண்டுகோள்

8


ADDED : மே 04, 2025 03:31 PM

Google News

ADDED : மே 04, 2025 03:31 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: பயங்கரவாத தாக்குதல் நடந்த பஹல்காமுக்கு சுற்றுலா வருவதை நிறுத்தி விடாதீர்கள் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் கரண் சிங் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, முன்னாள் கவர்னரும், ஜம்மு காஷ்மீர் மன்னர் பரம்பரையை சேர்ந்தவருமான கரண் சிங் கூறியதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் துயரமானது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட கொடூரம் அனைவரையும், குறிப்பாக காஷ்மீர் மக்களை மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு, 3 கோடி மக்கள் பஹல்காமிற்கு சுற்றுலா வருவார்கள் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் இந்தத் தாக்குதல் அச்சத்தை உருவாக்கி உள்ளது. அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்ற நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது.

பஹல்காமுக்கு சுற்றுலா வருவதை நிறுத்தி விடாதீர்கள். பஹல்காமிற்கு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருமாறு அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். மக்கள் எவ்வளவு பயப்படுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக பயங்கரவாதிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி விடும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us