sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இண்டியா கூட்டணிக்கு ஜூன் 4ல் பெரிய அடி நிச்சயம்: மோடி கணிப்பு

/

இண்டியா கூட்டணிக்கு ஜூன் 4ல் பெரிய அடி நிச்சயம்: மோடி கணிப்பு

இண்டியா கூட்டணிக்கு ஜூன் 4ல் பெரிய அடி நிச்சயம்: மோடி கணிப்பு

இண்டியா கூட்டணிக்கு ஜூன் 4ல் பெரிய அடி நிச்சயம்: மோடி கணிப்பு

4


ADDED : மே 21, 2024 02:42 PM

Google News

ADDED : மே 21, 2024 02:42 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: 'ஊழல், திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் சனாதனத்தை எதிர்க்கும் இண்டியா கூட்டணிக்கு, ஜூன் 4ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் போது பெரிய அடி நிச்சயம் கிடைக்கும்' என பிரதமர் மோடி கூறினார்.



பீஹார் மாநிலம் மொடிஹாரி பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இண்டியா கூட்டணியினர் செய்த பாவங்களால், நாடு முன்னேறி செல்ல முடியாது. இந்த தேர்தலுடன், ஒட்டுமொத்த இண்டியா கூட்டணிக் கட்சிகளையும் மக்கள் எவ்வாறு வீட்டுக்கு வழியனுப்பி வைக்கப் போகிறார்கள் என்பதை முழு உலகமும் பார்க்கப் போகிறது.

பட்டினி

மகாத்மா காந்தியின் கொள்கைகளை காங்கிரஸ் எப்போதோ மறந்து விட்டது. ஒரே ஒரு குடும்பத்தின் நலனைக் காக்க, இந்திய நாட்டின் 60 ஆண்டு காலத்தையும் வீணாக்கிவிட்டது. இங்கே இந்திய மக்கள் பட்டினியில் வாடிய போது, அவர்கள் சுவிஸ் வங்கியில் கணக்குகளை துவங்கினர். ஊழல், திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் சனாதனத்தை எதிர்க்கும் இண்டியா கூட்டணிக்கு, ஜூன் 4ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் போது பெரிய அடி நிச்சயம் கிடைக்கும்

இடஒதுக்கீடு

எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி.,யினரின் இடஒதுக்கீட்டை பறிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற காங்கிரஸ் விரும்புகிறது. அம்பேத்கர் இல்லையென்றால் நேரு எஸ்சி, எஸ்டிகளுக்கு இடஒதுக்கீட்டை அனுமதித்திருக்க மாட்டார். காங்கிரஸ் விட்டுச் சென்ற குழிகளை நிரப்புவதற்காக எனது முதல் 10 ஆண்டுகளை நான் செலவிட்டுள்ளேன். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல விரும்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






      Dinamalar
      Follow us