sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அபராதம் விதித்ததால் தீ வைக்க முயற்சி

/

அபராதம் விதித்ததால் தீ வைக்க முயற்சி

அபராதம் விதித்ததால் தீ வைக்க முயற்சி

அபராதம் விதித்ததால் தீ வைக்க முயற்சி


ADDED : மார் 12, 2024 03:30 AM

Google News

ADDED : மார் 12, 2024 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தட்சிண கன்னடா: போக்குவரத்து விதிமீறியதற்காக அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரின் வாகனத்துக்கு ஆட்டோ ஓட்டுனர் தீவைக்க முயற்சித்தார்.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரை சேர்ந்தவர் முகமது அன்சார், 30. ஆட்டோ டிரைவரான இவர், நேற்று காலை பன்ட்வாலின் பி.சி., சாலையில், ஆட்டோ ஓட்டும்போது மொபைல் போனில் பேசியபடியும், சீருடை அணியாமலும் வந்துள்ளார்.

இதை பார்த்த போக்குவரத்து போலீசார், அவரை நிறுத்தி, போக்குவரத்து விதிகளை மீறியதாக, 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால் கோபமடைந்த அவர், சாலையில் நின்றபடி போலீசாரை பார்த்து கத்தினார். அத்துடன், ஆட்டோவுக்கும், போலீஸ் வாகனத்தின் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சித்தார்.

அதற்குள் அவரை பிடித்து, போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்று, வழக்குப் பதிவு செய்தனர்.

இச்சம்பவம் அனைத்தையும், தங்கள் மொபைல் போனில் போலீசார் பதிவு செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us