மைசூரு பஸ் நிலையத்திலிருந்து கூடுதல் இணைப்பு பஸ்கள்
மைசூரு பஸ் நிலையத்திலிருந்து கூடுதல் இணைப்பு பஸ்கள்
ADDED : மார் 12, 2024 03:19 AM
பெங்களூரு: 'மெட்ரோ ரயில் பயணியருக்காக, இன்று முதல் கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்' என, பெங்களூரு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பி.எம்.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
வழித்தடம் எண் 47: மைசூரு சாலை பேருந்து நிலையத்தில் இருந்து அத்திகுப்பே, விஜயநகர், சீனிவாசநகர், பட்டேகாரபாளையம், மலகளா, சும்மனஹள்ளி ஜங்ஷன், கொட்டிகேபாளையா, பாபாரெட்டி பாளையா, கென்குன்டே சதுக்கம், நாகரபாவி சதுக்கம் வழியாக மைசூரு சாலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றடையும்.
இங்கிருந்து தினமும் அதிகாலை 5:40 மணிக்கு முதல் பேருந்தும்; இரவு 11:10 மணிக்கு கடைசி பேருந்தும் புறப்படுகிறது.
அதுபோன்று மறுமார்க்கத்தில் வழித்தடம் எண் 47 'ஏ': மைசூரு சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நாகரபாவி சதுக்கம், கென்குன்டே சதுக்கம், பாபாரெட்டி பாளையம், கொட்டிகேபாளையம், சும்மனஹள்ளி ஜங்ஷன், மலகளா, பட்டேகாரபாளையம், சீனிவாச நகர், விஜயநகர், அத்திகுப்பே வழியாக மைசூரு சாலை பேருந்து நிலையத்துக்கு வந்தடையும்.
இங்கிருந்து தினமும் அதிகாலை 5:50 மணிக்கு முதல் பேருந்தும்; இரவு 11:30 மணிக்கு கடைசி பேருந்தும் இயக்கப்படுகிறது. பயணியர் வசதிக்காக கூடுதலாக தலா மூன்று வீதம், ஆறு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

