sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புத்தரின் புனிதப்பொருட்கள் கண்காட்சி; டில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் மோடி

/

புத்தரின் புனிதப்பொருட்கள் கண்காட்சி; டில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் மோடி

புத்தரின் புனிதப்பொருட்கள் கண்காட்சி; டில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் மோடி

புத்தரின் புனிதப்பொருட்கள் கண்காட்சி; டில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் மோடி

1


UPDATED : ஜன 02, 2026 10:04 PM

ADDED : ஜன 02, 2026 05:42 PM

Google News

1

UPDATED : ஜன 02, 2026 10:04 PM ADDED : ஜன 02, 2026 05:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாளை (ஜன.3) கவுதம புத்தரின் புனிதப் பொருட்கள் கண்காட்சியை திறக்கிறேன், இது ஒரு மிக சிறப்பான நாள் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் கூறி உள்ளதாவது;

ஜன.3ம் தேதியான நாளை, வரலாறு, கலாசாரம் மற்றும் பகவான் புத்தரின் கொள்கைகள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு மிகச் சிறப்பான நாள். காலை 11 மணிக்கு, பகவான் புத்தர் தொடர்பான புனித நினைவுச்சின்னங்களின் மாபெரும் சர்வதேசக் கண்காட்சி, ஒளியும் தாமரையும்: ஞானம் பெற்றவரின் நினைவுச்சின்னங்கள் என்ற பெயரில் டில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாசார வளாகத்தில் திறந்து வைக்கப்பட உள்ளது.

இந்தக் கண்காட்சியானது நூற்றாண்டுகள் கழித்து கொண்டு வரப்பட்ட பிப்ரஹ்வா நினைவுச் சின்னங்கள், டில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் மற்றும் கோல்கட்டாவில் இந்திய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள உண்மையான நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.

கண்காட்சி, பகவான் புத்தரின் உன்னதமான சிந்தனைகளை மேலும் பிரபலப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு இணங்க அமைந்துள்ளது. நமது இளைஞர்களுக்கும் நமது செழுமையான கலாசாரத்திற்கும் இடையிலான பிணைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான ஒரு முயற்சி. நினைவுச்சின்னங்களைத் தாயகம் கொண்டு வர உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

இவ்வாறு பிரதமர் மோடி தமது பதிவில் கூறி இருந்தார்.






      Dinamalar
      Follow us