"வளர்ச்சியை உருவாக்குவதில் கூட்டுறவு துறைக்கு முக்கிய பங்கு": பிரதமர் மோடி பேச்சு
"வளர்ச்சியை உருவாக்குவதில் கூட்டுறவு துறைக்கு முக்கிய பங்கு": பிரதமர் மோடி பேச்சு
UPDATED : பிப் 24, 2024 03:07 PM
ADDED : பிப் 24, 2024 02:40 PM

புதுடில்லி: 'கிராமங்களில் வளர்ச்சியை உருவாக்குவதில் கூட்டுறவு துறை முக்கிய பங்கு வகிக்கிறது' என பிரதமர் மோடி கூறினார்.
நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டில்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கூட்டுறவு துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: வளமான பொருளாதாரத்தை உருவாக்குவதிலும், கிராமங்களில் வளர்ச்சியை உருவாக்குவதிலும் கூட்டுறவு துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் கிராமங்களில் வளர்ச்சியை உருவாக்குகிறது. விவசாயிகள் பயன்பெறும் வகையில், கூட்டுறவு கடன் சங்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கில் பா.ஜ., அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

