sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் சிறுவன் பலி

/

பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் சிறுவன் பலி

பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் சிறுவன் பலி

பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் சிறுவன் பலி


ADDED : ஏப் 29, 2024 05:16 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கமகளூரு, : சுற்றுலா பஸ் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில், 6 வயது சிறுவன் பலியானார்.

துமகூரு, சிராவை சேர்ந்த பலர் பஸ்சில், சிக்கமகளூருக்கு சுற்றுலா புறப்பட்டனர். இங்குள்ள மாணிக்யதாரா, முல்லையன கிரி, தத்த பீடம் என, பல இடங்களை பார்க்க திட்டமிட்டிருந்தனர்.

சிக்கமகளூரின், சந்திரதுரோணா மலை இறக்கத்தில், நேற்று மதியம் பஸ் சென்றது. திருப்பு முனையில் செல்லும் போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

தகவலறிந்து அங்கு வந்த, சிக்கமகளூரு போலீசார், பஸ்சில் சிக்கியிருந்த பயணியரை மீட்டனர். சிறார்கள், பெண்கள் உட்பட 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் நவாஸ், 6, என்ற சிறுவன் உயிரிழந்தார். ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.






      Dinamalar
      Follow us