sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'மோடியும், தேவகவுடாவும் வளர்ச்சிக்கு பாடுபடுவர்'

/

'மோடியும், தேவகவுடாவும் வளர்ச்சிக்கு பாடுபடுவர்'

'மோடியும், தேவகவுடாவும் வளர்ச்சிக்கு பாடுபடுவர்'

'மோடியும், தேவகவுடாவும் வளர்ச்சிக்கு பாடுபடுவர்'


ADDED : ஏப் 04, 2024 04:09 AM

Google News

ADDED : ஏப் 04, 2024 04:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : “பிரதமர் நரேந்திர மோடியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் இணைந்து, மாநில வளர்ச்சிக்கு பாடுபடுவர். பாலும், தேனும் போன்று பா.ஜ., - ம.ஜ.த.,வினர் பணியாற்றுகின்றனர்,” என, பெங்களூரு ரூரல் பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத் தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பிரதமர் மோடியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் இணைந்து, கர்நாடக மாநில வளர்ச்சிக்கு பாடுபடுவர். பாலும், தேனும் போன்று பா.ஜ., - ம.ஜ.த.,வினர் பணியாற்றுகின்றனர்.

தேவகவுடா பிரதமராக இருந்தபோது, லோக்சபாவில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகம் செய்தார். இன்று மோடி அந்த மசோதாவை நடைமுறைபடுத்தி உள்ளார்.

இத்தகையோர் மாநிலத்துக்கும், நாட்டுக்கும் நல்லது. இருவரின் வழிகாட்டுதல்படி நாங்கள் பணியாற்றுவோம்.

பிரதமர் மோடி உலகளவில் செல்வாக்குமிக்க தலைவர். அவரின் தலைமையின் கீழ், நாடு முன்னேற்ற பாதையில் செல்கிறது. அத்துடன் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னோடியாக உள்ளது. உலகளவில் இந்தியாவுக்கு தனி இடம் கிடைத்துள்ளது.

நாடு முழுதும் 400 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். அதில் நானும் ஒரு எம்.பி.,யாக இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us