sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி தற்கொலை

/

பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி தற்கொலை

பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி தற்கொலை

பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி தற்கொலை


ADDED : ஆக 10, 2024 06:30 AM

Google News

ADDED : ஆக 10, 2024 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகல்கோட்: திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

பாகல்கோட்டினி ரபகவி பனஹட்டி நந்தகாவ்ன் கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின் தலவாய், 22. தனியார் நிறுவன ஊழியர். இவரும், நந்தகாவ்ன் கிராமத்தின் பிரியா மடிவாளா, 19 என்பவரும், இரண்டு ஆண்டுகளாக காதலித்தனர். இவர்கள் காதல் பற்றி சமீபத்தில், இருவீட்டாருக்கும் தெரிந்தது. வேறு ஜாதி என்பதால், காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எக்காரணத்திற்கும் திருமணம் செய்யக்கூடாது என்று கூறினர்.

பிரியாவுக்கு, அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இதனால் மனம் உடைந்த காதல் ஜோடி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியேறியது. அவர்களை இரு குடும்பத்தினரும் பல இடங்களில் தேடினர்.

நேற்று காலை கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள, மரத்தில் சச்சினும், பிரியாவும் துாக்கில் பிணமாக தொங்கினர். மஹாலிங்கபுரா போலீசார் நடத்திய விசாரணையில், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது.






      Dinamalar
      Follow us